
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனைச் சேர்ந்தவர் தொழிலாளி பிரபாகரன் 32. இவருக்கு திருமணம் ஆகாததால் தாயார் சண்முகதாயுடன் வசித்து வந்தார்.
அவர் நான்கு நாட்களுக்கு முன்பு திடிரென மாயமானார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க இயலவில்லை.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 21ம் எண் தேயிலை தோட்டத்தின் அருகே காட்டில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் பிரபாகரன் பிணமாக தொங்கியதை நேற்று காலை பார்த்தனர். மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா, எஸ்.ஐ. ஜிதேஷ் கே. ஜான் ஆகியோர் விசாரித்தனர். குடும்ப தகராறு மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.

