/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரைவு வாக்காளர் பட்டியலில் 1.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் : மாவட்டத்தில் மொத்த 10,04,564 வாக்காளர்கள் எண்ணிக்கை
/
வரைவு வாக்காளர் பட்டியலில் 1.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் : மாவட்டத்தில் மொத்த 10,04,564 வாக்காளர்கள் எண்ணிக்கை
வரைவு வாக்காளர் பட்டியலில் 1.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் : மாவட்டத்தில் மொத்த 10,04,564 வாக்காளர்கள் எண்ணிக்கை
வரைவு வாக்காளர் பட்டியலில் 1.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் : மாவட்டத்தில் மொத்த 10,04,564 வாக்காளர்கள் எண்ணிக்கை
UPDATED : டிச 20, 2025 07:31 AM
ADDED : டிச 20, 2025 06:01 AM

தேனி:தேனி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் 4 தொகுதிகளிலும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 739 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 10,04,564 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் 2025 ஜன.6ல் வெளியிடப்பட்டது. அதன்பின் 2025 அக்.27 வரை பொது மக்களிடம் இருந்து சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம்,தொகுதி மாற்றம் ஆகியவற்றிற்காக பெறப்பட்ட மனுக்கள் விசாரணை செய்து வாக்காளர் பதிவு அலுவலர்களால் அனுமதிக்கப்பட்டது. அதன்படி ஆண்டிபட்டி தொகுதியில் ஆண்கள் 1,36,869 , பெண்கள் 1,42,280, இதரர் 34 இதரர் என மொத்தம் 2,79,183 வாக்காளர்கள் இருந்தனர். பெரியகுளம் (தனி) தொகுதியில் ஆண்கள் 1,41,477, பெண்கள் 1,48,373, இதரர் 120 இதரர் என மொத்தம் 2,89,970 வாக்காளர்கள். போடி தொகுதியில் ஆண்கள் 1,34,548, பெண்கள் 1,42,784 , இதரர் 18 என மொத்தம் 2,77,350 வாக்காளர்கள். கம்பம் தொகுதியில் ஆண்கள் 1,37,473, பெண்கள் 1,46,300 . இதரர் 27 என மொத்தம் 2,83,800 வாக்காளர்கள் இருந்தனர். 4தொகுதிகளிலும் 5,50, 367 ஆண்கள், பெண்கள் 5,79,737, இதரர் 199 பேர் என மொத்தம் 11, 30,303 வாக்காளர்கள் இருந்தனர்.
![]() |
அதன்பின் மாவட்டத்தில் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி நவ.4ல் முதல் டிச.14 வரை நடந்தது. இதில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கி, பூர்த்தி செய்த படிவங்களை பி.எல்.ஓ.,க்கள் பெற்று டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்தனர். அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்ட பி.எல்.ஏ.2 களப்பணிகளில் ஈடுபட்டனர். இப் பணிகள் நிறைவு பெற்று நேற்று மாலை தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். டி.ஆர்.ஓ., ராஜகுமார், பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., சையதுமுகமது, சமுக பாதுகாப்புத்திட்ட மாவட்ட அலுவலர் கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, தேர்தல் தாசில்தார் சுருளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கலெக்டர் கூறியதாவது: 2025 ஜன.6ல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலுக்கு பின் தற்போது நடந்த சிறப்புத் தீவிர சுருக்கத்தில் இறந்தவர்கள் 49,326 பேர், முகவரியில் வசிக்காதவர்கள் 6303 பேர், வெளியூர் சென்றவர்கள் 60,215 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 9587, இதரர் 308 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 739 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் இறந்தவர்கள், இரட்டைப்பதிவில் நீக்கம் செய்யப்பட்டவர்கள் தவிர பிற வாக்காளர்கள் தகுந்த ஆவணங்களின் படி, ஓட்டுப்பதிவுக்கு முன்தினம் வரை பட்டியலில் இணைக்கலாம் என்றார்.


