sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் 299 பேர் கைது 

/

 மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் 299 பேர் கைது 

 மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் 299 பேர் கைது 

 மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் 299 பேர் கைது 


ADDED : ஜன 07, 2026 06:06 AM

Google News

ADDED : ஜன 07, 2026 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரோடு மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட 299 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி கலெக்டர் அலுவலகம் முன் சி.ஐ.டி.யு., அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கம் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பி.எல்.ஓ., பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் சாந்தியம்மாள் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் நாகலட்சுமி, மாவட்ட நிர்வாகிகள் வளர்மதி, நாகலட்சுமி, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜெயபாண்டி உள்ளிட்டோர் மறியலில் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட பணியாளர்கள், சி.ஐ.டி.யு., சங்கத்தினர் 299 பேரை கைது செய்து, மண்டபத்தில் அடைத்தனர். கைது செய்த போது அரசு பஸ்கள், போலீஸ் வாகனத்தை பயன்படுத்தினர். ஒரு போலீஸ் வாகனம் பழுதானதால் ஆட்டோவில் சிலரை அழைத்து சென்றனர்.

செயல்படாத மையங்கள் ஊழியர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதால் மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள் செயல்பட வில்லை.






      Dinamalar
      Follow us