ADDED : அக் 07, 2025 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புபவர்கள் முன் கூட்டியே விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்க 33 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், 'விண்ணப்பங்கள் சப்கலெக்டர், ஆர்.டி.ஓ., எஸ்.பி., தீயணைப்புத்துறைக்கு அனுப்பபட்டுள்ளன. அத்துறை அதிகாரிகள் விண்ணப்பித்த இடங்கள், அங்குள்ள வசதிகள் பற்றி ஆய்வு செய்து பரிந்துரை செய்வார்கள். அதன்பேரில் அனுமதி வழங்கப்படும்,' என்றனர்.