ADDED : ஏப் 08, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பத்திலிருந்து கம்பமெட்டு ரோடு வழியாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் அதிகமாக நடைபெறுகிறது. கம்பமெட்டு ரோட்டில் புதுக்குளம் செல்லும் பாதையில் தகர செட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது.
துணை தாசில்தார் பரமசிவம் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் அந்த இடத்தை சோதனை செய்தனர்.
அங்கு 65 சிப்பங்களில் இருந்த 3.5 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி உத்தம பாளையம் சிவில் சப்ளை குடோவுனில் ஒப்படைக்கப்பட்டது.

