sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 அரசு வேலை வாங்கி தருவதாக போடியில் ரூ.10 லட்சம் மோசடி; 4 பேர் மீது வழக்கு

/

 அரசு வேலை வாங்கி தருவதாக போடியில் ரூ.10 லட்சம் மோசடி; 4 பேர் மீது வழக்கு

 அரசு வேலை வாங்கி தருவதாக போடியில் ரூ.10 லட்சம் மோசடி; 4 பேர் மீது வழக்கு

 அரசு வேலை வாங்கி தருவதாக போடியில் ரூ.10 லட்சம் மோசடி; 4 பேர் மீது வழக்கு


ADDED : நவ 28, 2025 09:01 AM

Google News

ADDED : நவ 28, 2025 09:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: தேனி மாவட்டம், போடியை சேர்ந்த சுதா 37, என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் வாங்கிய பாண்டியராஜ், மனைவி தீபா, உறவினர்கள் தமிழரசி, வேல்முருகன் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

போடி ஜே.கே.பட்டி பாரதி நாராயணன் தெருவில் வசிப்பவர் சுதா. பி.பி.ஏ., படித்துள்ளார். இவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போடி வினோபாஜி காலனியை சேர்ந்த பாண்டியராஜ், மனைவி தீபா, உறவினர்கள் தமிழரசி, வேல்முருகன் ஆகியோர் ரூ.10 லட்சம் கேட்டுள்ளனர்.

சுதாவின் பெற்றோர் பாண்டி, பொட்டியம்மாள் ரூ.10 லட்சம் கொடுத்து உள்ளனர். அதன் பின் நான்கு மாதங்கள் கழித்து அரசு பணியில் சேர்ந்து கொள்ளும்படி தமிழக அரசு முத்திரை பதித்த, சென்னை உயர் நீதிமன்ற சீல் வைத்து சுதா பெயருக்கு பணி நியமன ஆணை, சம்பள உத்தரவை வழங்கினர். உத்தரவை பெற்ற சுதா, கணவர் விஜயகுமார் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சென்றனர். அங்கு பணி நியமன ஆணை போலியானது என தெரிந்தது.

வேலைக்காக கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு பாண்டியராஜ், தீபா ஆகியோரிடம் பலமுறை கேட்டும் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடம் சுதா புகார் செய்தார். பாண்டியராஜ், தீபா உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us