sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மறியலில் ஈடுபட்ட 852 பணியாளர்கள் கைது

/

 மறியலில் ஈடுபட்ட 852 பணியாளர்கள் கைது

 மறியலில் ஈடுபட்ட 852 பணியாளர்கள் கைது

 மறியலில் ஈடுபட்ட 852 பணியாளர்கள் கைது


ADDED : பிப் 04, 2026 06:09 AM

Google News

ADDED : பிப் 04, 2026 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், அரசுத்துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு 5 சதவீத முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ரோடு மறியல் நடந்தது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சின்னசாமி, தேன்மொழி, அரசு ஊழியர் சங்க நிர்வாகி சென்னமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 836 பெண்கள், 16 ஆண்கள் என மொத்தம் 852 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கன்வாடி பணியாளர் 800க்கும் மேற்பட்டோர் விடுமுறை எடுத்ததால் அங்கன்வாடி மையங்கள் ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஊராட்சி பணியாளர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us