/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ம யானத்தில் எரிந்த நிலையில் சடலம்
/
ம யானத்தில் எரிந்த நிலையில் சடலம்
ADDED : ஜன 30, 2026 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி புல்லக்காபட்டி மயானத்தில் நேற்று உடல் முழுவதும் எரிந்து, கால் பாதம் எரியாமல் சடலம் கிடந்தது. அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தேவதானப்பட்டி போலீசார் சடலத்தை மீட்டும், எரிந்து கிடந்த எலும்பினை சேகரித்து தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.உடல் பாலினம் தெரியவில்லை. புல்லக்காபட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் யார் இறந்துள்ளனர் என்ற விபரமும், மேலும் யாராவது கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளனரா என இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் விசாரணை செய்து வருகிறார்.

