ADDED : ஏப் 24, 2026 05:23 PM
அ நிறம் | அளவு
கடமலைக்குண்டு:ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட தாழையூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஓட்டுச்சாவடி 196 ல் நேற்று முன் தினம் மாலை 5:30 மணிக்கு ஓட்டுப்பதிவை நிறைவு செய்து விட்டனர்.
அதன் பின் 12 வாக்காளர்கள் ஓட்டுப்பதிவுக்காக வந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு கூடுதல் ஓட்டு பதிவு இயந்திரம் வரவழைக்கப்பட்டு அவர்களின் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
