ADDED : ஜன 06, 2026 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் அமிர்தினி, சிவபார்வதி, அருணாசெல்வி, ஹரிணி,ஹேமலதா, மெல்வினா ஷெர்வின், நிர்மலாதேவி, பூஜா ஸ்ரீ, சஹானா ஸ்ரீ, நவீனா, தங்க இளமதி, வித்யா, விஜயலட்சுமி, வினோபா ஆகியோர் ஜெயமங்கலம் பகுதியில் கிராம தங்கல் திட்ட பணிகளை மேற்கொண்டனர்.
சமூக, வள, இயக்கத்திறன் வரைபடம் குறித்து விளக்கினர். வகைகளின் விளைச்சல் பெருக்கு திறன் உள்ளிட்டவை தொடர்பாக விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தும், கள பயிற்சியிலும் ஈடுபட்டனர். -

