ADDED : ஜன 25, 2026 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் துவங்கும் முன் மதுரை வேளாண் கல்லுாரி, ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் ஐஸ்வர்யா, புவனா, தீபிகா, டெபிஷா, தேஸ்ரீ, தர்ஷினி, திவ்யதர்ஷினி ஆகியோர், தேசிய வேளாண் சந்தை(இநாம்) முறைபற்றியும், அதன் நன்மைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினர்.
கொடுவிலார்பட்டியில் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் கல்லுாரி மாணவர்கள் அகிலன், தனுஷ், முகேஷ், ஜெயகணேஷ், சக்திவேல், சிலம்பரசன், முகமதுசஹல் ஆகியோர் கிராம தங்கள் திட்டத்தில் பயிர் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள், பூச்சிநோய் மேலாண்மை, ஊடுபயிர்கள் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

