ADDED : ஆக 24, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
கம்பம், ஆக.
25
மேகமலை பகுதி கிராமங்களில் வசிப்பவர்களை வெளியேற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கம்பத்தில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வாவேர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஜெயினுலாப்தீன் தலைமை வகித்தார். இதில் தி.மு. க., இடதுசாரிகள், தே.மு.தி.க., ம. நீ . ம. அகில இந்திய பார்வர்டு பிளாக், எஸ்.டி.பி. ஜ., மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம், மனித நேய ஜனநாயக கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, தி. க. உள்ளிட்ட பல அரசியல் கட்சி நிர்வாகிகளும், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்று பேசினார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பேசினார்கள்.
