ADDED : ஆக 22, 2025 02:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில், ' பயனாளிகளுக்கு சத்துமாவு வழங்க முகம் பதிவு செய்யும் முறையை கைவிட வேண்டும்.
அங்கன்வாடி மைய பணிகளை செய்ய 5ஜி அலைபேசிகள், மையங்களுக்கு வைபை இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சித்ரா தலைமை வகித்தார். மாநில இணைச்செயலாளர் நாகலட்சுமி, மாவட்ட செயலாளர் வனிதா, மாவட்ட பொருளாளர் நாகலட்சுமி, சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜெயபாண்டி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றனர்.

