/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
/
அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 07, 2026 06:26 AM

தேனி: கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுப்புராஜ், அன்பழகன், தேன்மொழி, சுமதி, தங்கமீனா உள்ளிட்டோர் காத்திருப்பு பேராட்டத்தில் பங்கேற்றனர். அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை காத்திருப்பு போராட்டத்தில் தொடர்வதாக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் மாவட்டத்தில் சில இடங்களில் அங்கன்வாடி மையங்கள் செயல்படவில்லை.

