ADDED : மார் 28, 2026 10:32 PM

அ நிறம் | அளவு
கூடலுார்:கூடல் சுந்தரவேலவர் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா மங்கள இசையுடன் துவங்கியது. சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. அனைத்து மும்மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம், கலசாபிஷேகம், தீபாராதனை நடந்தது.
வள்ளி தேவசேனா சமேத கூடல் சுந்தரவேலருக்கும் உடன் பரிவார தெய்வங்களுக்கும் நடந்த வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கூடலுார் ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
