தேனி: பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் தேசிய தேர்வு முகமை சார்பில் தேசிய ஓட்டல் மேலாண்மை கவுன்சில் இணை நுழைவுத்தேர்வு மூலம் பி.எஸ்.சி., ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில் மூன்று வருட பட்டப்படிப்பில் சேர்ந்து பயில விண்ணப்பிக்கலாம்.
சென்னையில் உள்ள நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பிப்போர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இந்த இணை நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு ஏப்., 25ல் நடைபெறும். http://exams.nta.nic.in/nchm.jee/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ பிரிவை அணுகலாம். அல்லது 04546 -260 995 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

