ADDED : ஜூன் 02, 2025 12:51 AM
அ நிறம் | அளவு
போடி: போடி அருகே சிலமலை அரசு மேல் நிலைப் பள்ளியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, உதவி தலைமை ஆசிரியர் அக்ஷயா, தலைவர் வடமலை முத்து, தி கிரீன் லைப் பவுண்டேஷன் செயலாளர் சுந்தரம், பென்னி குவிக் அறக்கட்டளை நிர்வாகி அர்ஜூன பெருமாள், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் கனக பாண்டியம்மாள், ராஜபாண்டியன் ஆகியோரை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
