ADDED : அக் 11, 2025 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் அரசு ஊழியர் சங்கம் சார்பில், லோக்சபாவில் தாக்கல் செய்த 8 வது ஊதியக்குழு மாசோதா வரையறைகளை திரும்ப பெற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முகமதுஆசிக், பொது சுகாதாரத்துறை அலுவலர் ஒய்வூதியர் சங்க நிர்வாகி கனகராஜ், அங்கன்வாடி,சத்துணவு பணியாளர் ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்பழகன், அரசு ஊழியர் சங்கம் மாவட்ட துணைத் தலைவர் ஜின்னா ஆகியோர் பேசினர். ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.