ADDED : அக் 29, 2024 05:46 AM

பெரியகுளம்: மத்திய அரசு ஊழல் கண்காணிப்பு ஆணையம், ஒவ்வொரு ஆண்டும் அக்.31ல் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் நடத்தப்படும். இந்த ஆண்டின் விழிப்புணர்வு வாரம் அக்.28 துவங்கி நவ. 3 வரை 'நேர்மை பண்பே தேசத்தின் செழுமை' என்ற கருப்பொருளை மையப்படுத்தி நடக்கிறது.
பெரியகுளம் தலைமை தபால் நிலையம் முன் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., நல்லு கொடியசைத்து துவக்கி வைத்தார். பெரியகுளம் தபால் அலுவலர் விக்னேஷ் சுந்தர்,
உபகோட்ட ஆய்வாளர் சபாரெட்டி, சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். எட்வர்டு நடுநிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கச்சேரி ரோடு, தெற்கு ரதவீதி வழியாக தபால் நிலையத்தில் முடிந்தது. அனைவரும் மனித சங்கிலி ஒருமைப்பாடுஉறுதிமொழி எடுத்தனர்.

