ADDED : ஜன 25, 2026 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் ஆண்டிபட்டி அருகே கொத்தப்பட்டியில் கிராம தங்கல் திட்டத்தில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
கிராமங்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக கொத்தப்பட்டி அரசு உயர்நிலை மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுடன், வேளாண் தொழில்நுட்பக்கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தில் தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணகுமார், ஜெயராதா, உதவி தலைமை ஆசிரியர் சரவணக்குமார், உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

