ADDED : மார் 04, 2026 06:01 AM

போடி: போடியில் தேனி மாவட்ட போலீசார், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் 'ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் ' குறித்த விழிப்புணர்வு ஊர்வலம், எஸ்.பி., சினேஹா பிரியா தலைமை வகித்து துவக்கி வைத்தார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., கலைக் கதிரவன், இணையதள குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்சாண்டர், சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., முத்துராஜ், போடி டி.எஸ்.பி., முருகன் முன்னிலை வகித்தனர். போடி டவுன் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வரவேற்றார்.
அரசு சிறப்பு வழக்கறிஞர் இசக்கிவேல், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நலச் சங்க நிறுவனர் சுப்ரமணியன், போடி ஏ.எச்.எம்., டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் முகமது சேக் இப்ராகிம், நல்லோர் வட்டம் மதுரை மண்டல பொறுப்பாளர் குறிஞ்சிமணி , அன்னை தெரசா அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தைதொழிலாளர் ஒழிப்பது, மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து குறித்து விளக்கி கூறினர். போடி சி.பி.ஏ., கல்லூரி மாணவ, மாணவிகள், மலைவாழ் மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

