UPDATED : செப் 10, 2026 05:43 PM
ADDED : செப் 10, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
கம்பம்:காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில்ேஉடல் பருமன் நோய் பற்றிய விழிப்புணர்வு, அதற்கான சித்த மருந்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
டாக்டர் தாரணி தலைமை வகித்தார். சித்தா டாக்டர் சிராசுதீன் முன்னிலை வகித்து உடல் பருமன் குறித்து பேசுகையில்,' உடல் பருமன் காரணமாக சர்க்கரை, ரத்த கொதிப்பு, இதய நோய், மூட்டு வலிகள் வரும். இதை தவிர்க்க நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, சைக்கிள் ஒட்டலாம். சித்த மருத்துவத்தில் சதகுப்பை குடிநீர், திரிபலா சூரணம், சிலாசத்து, சலமஞ்சூரி செந்தூரம் பயன்படுத்தலாம்.' என்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சித்த மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட நல கல்வியாளர் வேல்முருகன், சுகாதார மேற்பார்வையாளர் முரளி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
