நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது.
மாநில நெடுஞ்சாலைத்துறை தேனி கோட்ட பொறியாளர் சுவாமி நாதன் அறிவுறுத்தலில் உதவி கோட்டப்பொறியாளர் ராமமூர்த்தி முன்னிலையில் திண்டுக்கல் குமுளி ரோட்டில் உள்ள உப்பார்பட்டி டோல்கேட்டில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். டூவீலரில் இருவர் மட்டும் செல்ல வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கினர். சிவலிங்க நாயக்கன்பட்டியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமிலும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.