/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள் தொடர்ச்சி...
/
விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள் தொடர்ச்சி...
ADDED : நவ 17, 2024 06:24 AM

ஆண்டிபட்டி: தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் நிறுவனர் முத்து வன்னியன் தலைமையில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பால விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். பல்வேறு கிராமங்களிலும் ஆங்காங்குள்ள கோயில்களில் பக்தர்கள் பலர் மாலை அணிந்து விரதம் துவக்கி உள்ளனர்.
தேனி: பெத்தாட்சி விநாயகர் கோயிலில் அதிகாலை 4:00 மணியில் இருந்து மாலை அணிந்து, விரதம் துவங்க பக்தர்கள் வருகை தந்தனர். துளசி மாலைகளை கோயில் குருக்கள் பக்தர்களுக்கு அணிவித்தனர். என்.ஆர்.டி., நகர் சிவ கணேச கந்த பெருமாள் கோயில், மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பெரியகுளம் ரோடு வெற்றி கொம்பன் விநாயகர் கோயில், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் அருகே வராகநதியில் ஐயப்ப பக்தர்கள் நீராடி, ஐஸ்வர்ய விநாயகர் கோயில் முன்பு மாலை அணிந்து விரதம் துவங்கினர். பெரியகுளம் பாலசாஸ்தா கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்தனர். 48 நாள் மண்டல பூஜை துவக்க நாளை முன்னிட்டு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அர்ச்சகர் பிரசன்னா பூஜைகள் செய்தார். பிரசாதம் வழங்கப்பட்டது. தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மஞ்சளாற்றில் நீராடி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். முதன் முதலாக கோயிலுக்கு செல்லும் கன்னிசாமிகள் அதிகளவில் மாலை அணிந்தனர்.