ADDED : நவ 28, 2025 08:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வீரபாண்டி கண்ணீஸ்வர முடையார் கோவிலில் அறநிலையத்துறை சார்பில் மூத்த 50 தம்பதிகளுக்கு மணிவிழா நடந்தது.
எம்.பி., தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஜெயதேவி முன்னிலை வகித்தார். விழாவில் பங்கேற்ற தம்பதிகளுக்கு புத்தாடை, தாம்பூலம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கவுமாரியம்மன் கோவில் செயல் அலுவலர் நாராயணி செய்திருந்தார்.

