ADDED : ஜன 22, 2026 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசின் விலை இல்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ரங்கராஜன் தலைமை வகித்தார்.
நகர் நல கமிட்டி தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் சந்திரகலா 132 மாணவர்களுக்கு அரசின் சைக்கிளை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சசிகலா, பேரூராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

