ADDED : பிப் 11, 2026 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யாத தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., மாவட்ட மகளிரணி சார்பில் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட மகளிரணி தலைவி ஜீவா பாண்டீஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி, நகரத்தலைவர் ரவிக்குமார், மாவட்டபொதுச்செயலாளர்கள் மலைச்சாமி, வினோத், பொன்ஆனந்த், மகளிர் அணிநிர்வாகிகள் கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

