நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பூதிப்புரத்தில் நண்பர்கள் நட்பு வட்டம் சார்பில், 'உலகிலேயே முதன் முதலில்' எனும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. ஓய்வு டி.எஸ்.பி., காந்தசொரூபன் தலைமை வகித்தார். சிதம்பரம், வீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓய்வு நீதிபதி பரமராஜ் நூலை வெளியிட்டார். வழக்கறிஞர் முத்துராமலிங்கம், எழுத்தாளர் சுப்பிரமணி, நடிகை தனம் ஆகியோர் நுாலை பெற்றுக்கொண்டனர். நுாலாசிரியர் கவிக்கருப்பையா விழாவை ஒருங்கிணைத்தார்.

