தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ நீரில் மூழ்கி சிறுவன் பலி

நீரில் மூழ்கி சிறுவன் பலி

நீரில் மூழ்கி சிறுவன் பலி


ADDED : மே 07, 2025 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2025 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடமலைக்குண்டு: தேனி அருகே நாகலாபுரம் ஸ்ரீரங்காபுரத்தைச் சேர்ந்தவர் கேசவன் மனைவி செல்வி, தனது மகன் ராகேஷ் 10, மற்றும் உறவினர்களுடன் கோம்பைத்தொழு அருகே உள்ள சின்னச்சுருளி அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர்.

சிறுவர்கள் சிலர் முன்கூட்டியே அருவிக்கு சென்று குளித்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பின் உடன் வந்திருந்த ராகேஷ் மட்டும் அப்பகுதியில் இல்லாததால் சிறுவனை தேடினர். அருவிக்கு கீழே தண்ணீர் தேங்கி இருக்கும் பள்ளத்தில் தேடிப் பார்த்தபோது தண்ணீருக்குள் மூழ்கிக் கிடந்துள்ளார். அவரை மீட்டு குமணன்தொழு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us