நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே இடமலைகுடி ஊராட்சியில் கீழ்பத்தம்குடியைச் சேர்ந்த வெள்ளச்சாமி மனைவி அன்னம்மா 55, மிளகு பறிக்கும் பணியில் ஈடுபட்டார்.
மரத்தில் படர்ந்த மிளகு கொடியில் ஏணி வைத்து மிளகு பறிப்பது வழக்கம். அப்போது எதிர்பாராமல் ஏணி சரிந்ததால் அன்னம்மா கீழே விழுந்து கை முறிந்தது. டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

