ADDED : பிப் 21, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண், துணைத்தலைவர் அப்துல்குத்துாஸ், உறுப்பினர்கள் பிப்.,25ல் தேனி மாவட்டத்திற்கு வருகின்றனர்.
இவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் காலை 11:30 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நல மேம்பாட்டு, குறைகள், அரசு திட்டங்கள் பற்றி சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்களின் பிரதிநிதிகள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.