ADDED : ஆக 19, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி; தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெரு பாலமுருகன் 39. நான்கு சக்கர சரக்கு லோடு வாகனத்தில் வைத்துள்ளார். ஆக.,17 ல் தேனிதிட்டச்சாலை சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்கம் அருகில் வாகனத்தை நிறுத்தி விட்டு இரவு துாங்க வீட்டிற்கு சென்றார்.
மறுநாள் பார்க்கும் போது ரூ.8 லட்சம் மதிப்பிலான வாகனம் திருடு போயிருந்தது. டி.எஸ்.பி., அலுவலகம் அருகே வாகனம் திருடு போனது குறித்து பாலமுருகன் தேனி போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., இளங்குமரன் விசாரிக்கிறார்.

