sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஏலச்சீட்டு நடத்தி ரூ.14.15 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு

/

ஏலச்சீட்டு நடத்தி ரூ.14.15 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு

ஏலச்சீட்டு நடத்தி ரூ.14.15 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு

ஏலச்சீட்டு நடத்தி ரூ.14.15 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு


ADDED : ஆக 12, 2025 06:52 AM

Google News

ADDED : ஆக 12, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனியில் ஏலச்சீட்டு நடத்தி பெண் உட்பட 6 பேரிடம் ரூ.14.15 லட்சம் மோசடி செய்தவர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தேனி பழைய ஜி.ஹெச்., ரோடு சிங்கப்பூர் லைன் வனிதாராணி 38. இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் சீட்டு கம்பெனி நடத்துவதாகவும் ரூ.ஒரு லட்சம் கொடுத்தால், ரூ.1.10 லட்சம் தருவதாகவும் கூறினார்.

அதனை நம்பிய வனிதாராணி 4 சீட்டுத்திட்டங்களில் சேர்ந்து ரூ.2.20 லட்சம் செலுத்தினார்.

இவர் உட்பட 6 பேரது சீட்டுப்பணம் ரூ.11 லட்சத்து 95 ஆயிரத்து 100 சேர்த்து மொத்தம் ரூ.14 லட்சத்து 15 ஆயிரத்து 100 வரை வசூலித்து வெங்கடேசன் மோசடி செய்தார்.

இதுகுறித்து வனிதாராணி தேனி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்படி வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., பாஸ்கரன் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us