sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 கணவரை தாக்கிய மனைவி மீது வழக்கு

/

 கணவரை தாக்கிய மனைவி மீது வழக்கு

 கணவரை தாக்கிய மனைவி மீது வழக்கு

 கணவரை தாக்கிய மனைவி மீது வழக்கு


ADDED : டிச 11, 2025 06:57 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: டிச.11-: -: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் 41. பெரியகுளம் என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்த ராஜாராம் மகள் வினோதினி 39. இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகள் உள்ளார்.

ரெங்கநாதன் 6 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் இன்ஜினியராக பணிபுரிந்து, ஒரு ஆண்டுக்குக்கு முன் மதுரை வந்துள்ளார். வினோதினி பெரியகுளத்தில் பெற்றோருடன் வசித்து, தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். ரெங்கநாதன் தன்னுடன் மதுரைக்கு குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். வினோதினி மறுத்துள்ளார்.

பெரியகுளம் வந்த ரெங்கநாதன், வினோதினி ஒருவரிடம் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து தகராறு செய்துள்ளார். ரெங்கநாதனை அவதூறாக பேசிய வினோதினி தாக்கியுள்ளார். வினோதினிக்கு ஆதரவாக 6 பேரும் ரெங்கநாதனை தாக்கியுள்ளனர்.

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரெங்கநாதன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வடகரை போலீசார் வினோதினி உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us