sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கள்ள நோட்டு மாற்றிய கோவை நபர் கைது

/

கள்ள நோட்டு மாற்றிய கோவை நபர் கைது

கள்ள நோட்டு மாற்றிய கோவை நபர் கைது

கள்ள நோட்டு மாற்றிய கோவை நபர் கைது


ADDED : மே 12, 2025 12:40 AM

Google News

ADDED : மே 12, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : கடலுார் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர்., நகர் முருகேசன் 30. இவர், பன்றிகளை வளர்த்து வருவதுடன் திருவிழாக்களில் பீங்கான் ஜாடிகளை விற்பனை செய்கிறார்.

அவருக்கு பழக்கமான கோவை மாற்றுத் திறனாளியான அப்துல்ரகுமானிடம் 43, முன்பணமாக ரூ.30 ஆயிரம் வழங்கி, கரும்பு அரவை இயந்திரத்தை பெற்றார்.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா முடிந்ததும், மீதிப்பணம் தருவதாகக் கூறினார். பின், வீரபாண்டி பகுதியில் கடை அமைத்தார். இரண்டு நாட்களில் கரும்பு அரவை இயந்திரம் பழுதானது.

பழுதான இயந்திரத்தை அப்துல்ரகுமானிடம் முருகேசன் முத்துத்தேவன்பட்டி பிரிவு அருகே உள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்டில் வைத்து, திரும்ப ஒப்படைத்தார். முன்பணம் ரூ.30 ஆயிரத்தை முருகேசனிடம் அப்துல்ரகுமான் வழங்கினார்.

பணத்தை எண்ணிய போது 7 கள்ள நோட்டுகள் இருந்தன. முருகேசன் வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். அப்துல்ரகுமானை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us