ADDED : பிப் 21, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், என்.ஆர்.டி., நகரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கிய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகரத் தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, ஆண்டிபட்டி ஒன்றிய கவுன்சிலர் முனியாண்டி, மாவட்டச் செயலாளர் சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
தேனி ஒன்றிய குழுவின் துணைத் தலைவர் முருகன் வரவேற்றார். நகர துணைத் தலைவர்கள் நாகராஜ், முகமதுமீரான், எஸ்.சி., பிரிவு மாவட்டத் தலைவர் இனியவன், மூத்த நிர்வாகி தாஜூதீன், நகரச் செயலாளர் சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

