ADDED : பிப் 13, 2026 06:01 AM

அ நிறம் | அளவு
தேனி: சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ஆறாவது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராதிகா, கிருபா, தனுஷ்கோடி, மாவட்ட துணைத்தலைவர் சுமதி, மாவட்ட செயலாளர் சுமதி, குமரன், சரசு, பஞ்சவர்ணம் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
