ADDED : ஜன 05, 2026 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே முத்தையன்செட்டிபட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கருத்தப் பாண்டி 51. இவரது மகள் சுகப்பிரியா 23. ஈரோடு பெருந்துறை தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று முன் தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கருத்தப்பாண்டி புகாரில் போடி தாலுகா போலீசார் சுகப் பிரியாவை தேடி வருகின்றனர்.

