ADDED : பிப் 04, 2025 05:42 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் சி.ஐ.டி.யு., கூட்டுறவு சங்கங்களின் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். அதில் கூட்டுறவு வாரவிழாவில் குளறுபடி செய்தவர்களை கண்டித்தும், அதிகாரி மீது அவதுாறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், கூட்டுறவுசங்க மாவட்ட நிர்வாகிகள் சேதுராமன், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜெயப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
