நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கள்ளர் பள்ளி விடுதிகளை சமூகநீதி விடுதி என பெயர் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகி மணித்தேவர் தலைமையில் நடந்தது.
புரட்சிதமிழர் கட்சி மாநில தலைவர் அருந்தமிழரசு தலைமையில்,'5 கி.மீ., துாரத்திற்குள் வசிக்கும் மாணவர்களை விடுதிகளில் சேர்க்க கூடாது என்ற புதிய விதியினை ரத்த செய்ய வேண்டும். இதனால் விடுதிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி வாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது,' என்ற கோரிக்கையை வலியுறுத்த கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.