நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வருவாய்த்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் வாரத்திற்கு இரு முகாம்கள் மட்டும் நடத்த வேண்டும், பேரிடர் மேலாண்மை துறையில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுரேந்திரன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சதீஷ்குமார், கருப்பணராஜா, ஒச்சாத்தேவன், சிவன்காளை, அகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.