நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்ட இந்திய கம்யூ.
கட்சியின் சார்பில், பழங்குடியினர், தலித் பெண்கள் மீதான வன்கொடுமை தாக்குதலை கண்டித்தும், அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்தது. தேனி தாலுகா தலைவர் மொக்கமாயன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், பாண்டி முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் பெருமாள் நிறைவுரை ஆற்றினார்.

