ADDED : நவ 20, 2025 05:29 AM

அ நிறம் | அளவு
தேனி: கலெக்டர் அலுவலகம் முன் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்க பொருளாளர் நாகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
70 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிர்வாகிகள் அரங்கசாமி, ஆண்டவர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
