நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அரசுத்துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தமாக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட துணைத்தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் நாகராஜன், நிர்வாகிகள் லட்சுமி,சாந்தி, பரமேஸ்வரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

