ADDED : செப் 18, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.19–தேனி கலெக்டர் அலுவலகத்தில் உதவி வேளாண் அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். உதவி வேளாண் பணியை தொழில்நுட்ப பணியாக அங்கீகரித்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 ஆணைப்படி கிராமங்களில் வேளாண் அலுவலகம் அமைக்க வேண்டும், உயிர் உரங்கள் நுாறு சதவீத மானியத்தில் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து டி.ஆர்.ஒ., ராஜகுமாரிடம் மனு அளித்தனர். நிர்வாகிகள் மணிகண்டன், சரவணக்குமார், கணேசன், முருகவேல்,சிவக்குமார், வளர்மதி, கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
