ADDED : நவ 17, 2024 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
--தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி புதுத்தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் 40. இவர் பெரியகுளம் ஒன்றிய தி.மு.க., வர்த்தக அணி அமைப்பாளர் இருந்தார். குடும்ப பிரச்னையால் நான்கு நாட்களுக்கு முன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.-