UPDATED : ஆக 19, 2026 11:26 PM
ADDED : ஆக 19, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
தேனி:வீரபாண்டி பேரூராட்சியில் 7 வது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்கப்படாமல் இருந்தது.
இதனால் மழைகாலங்களில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. வடிகால் வசதி அமைத்து தர கோரி அப்பகுதி பொதுமக்கள் தேனி நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ரஜினியிடம் மனு அளித்தனர். வடிகால் அமைத்து கொடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வீரபாண்டி பேரூராட்சி அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ரூ.24.90 லட்சத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மழைநீர் வடிகால் அமைத்ததற்கான ஆவணங்களை நீதிபதியிடம் வீரபாண்டி பேரூராட்சி அதிகாரிகள் வழங்கினர்.
