ADDED : ஜூலை 01, 2026 04:32 AM

அ நிறம் | அளவு
தேனி: தேனியை சேர்ந்த விவசாயி ஒருவரிடம், மக்காச் சோளத்தை வியாபாரி ஒருவர் கொள்முதல் செய்தார். அதற்காக, 1 லட்சம் ரூபாயை விவசாயி வங்கி கணக்கிற்கு 'டிபாசிட்' செய்தார்.
ஆனால், விவசாயி வங்கி கணக்கிற்கு பணம் வரவு ஆகவில்லை. இதை, தேனி வேளாண் அலுவலர் வினோத்குமார் ஆய்வு செய்தார். அப்போது, விவசாயி வங்கி கணக்கிற்கு செல்ல வேண்டிய, 1 லட்சம் ரூபாய் 'ஹேக்' செய்து மோசடி செய்யப்பட்டது தெரிந்தது.
புகாரில், தேனி சைபர் கிரைம் போலீசார், சென்னை போரூரை சேர்ந்த கார் டிரைவர் விக்னேஷ், 31, என்பவரை கைது செய்தனர்.
