sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போதையில் தகராறு: 3 பேர் கைது

/

போதையில் தகராறு: 3 பேர் கைது

போதையில் தகராறு: 3 பேர் கைது

போதையில் தகராறு: 3 பேர் கைது


ADDED : ஜன 19, 2025 05:38 AM

Google News

ADDED : ஜன 19, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே குன்னூரை சேர்ந்தவர் பிரேம்நாத் 24, இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலை தேடி வருகிறார்.

ஜனவரி 16 இல் குன்னூரில் தனது உறவினர்களுடன் அம்மச்சியாபுரம் ரோடு களத்து மேட்டிற்கு அருகே நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அங்கிருந்த சிலர் களத்து மேட்டில் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்துள்ளனர். இது குறித்து பிரேம்நாத் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தட்டிக்கேட்டுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் அம்மச்சியாபுரம் நந்தகுமார் ஆட்டோவில் இருந்த அரிவாளை எடுத்து தாக்கியுள்ளார். அவருடன் இருந்தவர்கள் பீர் பாட்டில், செங்கலால் தாக்கியதில் பிரேம்நாத், அவருடன் இருந்த பாண்டி குமார் 30, கோபிநாத் 29, மிதுன்பாரத் 28, ஆகியோர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து விசாரித்த க.விலக்கு போலீசார் தகராறில் ஈடுபட்டு தாக்கிய அம்மச்சியாபுரம் நந்தகுமார் 23, ராகுல் ராஜன் 30, பிரேம்நாத் 24, ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். சங்கர், சஞ்சய்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us