sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 வைகை அணை நீர்மட்டம் குறைந்ததால் 58ம் கால்வாய் நீர் வெளியேற்றம் நிறுத்தம்

/

 வைகை அணை நீர்மட்டம் குறைந்ததால் 58ம் கால்வாய் நீர் வெளியேற்றம் நிறுத்தம்

 வைகை அணை நீர்மட்டம் குறைந்ததால் 58ம் கால்வாய் நீர் வெளியேற்றம் நிறுத்தம்

 வைகை அணை நீர்மட்டம் குறைந்ததால் 58ம் கால்வாய் நீர் வெளியேற்றம் நிறுத்தம்


ADDED : நவ 15, 2025 01:36 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: வைகை அணை நீர்மட்டம் நேற்று காலை 10:00 மணிக்கு 67.19 அடியாக குறைந்தது. இதனை தொடர்ந்து 58ம் கால்வாயில் வெளியேறும் நீர் தானாகவே நின்று விட்டது.

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வசதி உள்ளது. வைகை அணை நீர்மட்டம் 67 அடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே கால்வாய் மதகுகள் வழியாக அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்ற முடியும். அணை நீர்மட்டம் அக்.29 ல் 69.46 அடியாக இருந்தபோது (அணையின் உயரம் 71 அடி) , 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடி நீர் வீதம் திறந்து விடப்பட்டது. ஏற்கனவே ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு ஆற்றின் வழியாகவும், கால்வாய் வழியாகவும் நீர் வெளியேறியதால் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. இதனைத் தொடர்ந்து 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடி வீதம் வெளியேறிய நீரின் அளவும் படிப்படியாக குறைந்தது. நேற்று அணை நீர்மட்டம் 67.19 அடியான போது, 58 ம் கால்வாய் வழியாக வெளியேறும் நீரும் நின்று போனது. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1565 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்கு வினாடிக்கு 2299 கன அடி நீர் வெளியேறுகிறது.






      Dinamalar
      Follow us